ரஜினியைப் பத்தி சி.பி. எஸ்.ஸி.யில் பாடம் நடத்துகிறார்களாமே ….?
சாட்டை!
எப்போதோ சொல்லிக் கொடுக்க வேண்டியது.
இப்போதாவது புத்தி வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்!
முரண்பாடு என்ன தெரியுமா?
பில்கேட்சை இளைய தலைமுறையின் கனவு நாயகனாகக் கட்டமைக்கிறவர்கள், ரஜினி விசயத்தில் முகம் சுழிக்கும் கொடுமை.
ஊரை அடித்து உலையில் போடுவது எப்படி? என கற்றுக் கொடுப்பதுதான் இப்போதையக் கல்வி முறை. அப்படிப்பட்ட கல்விக்கு ரஜினி மட்டுமல்ல; அர்சத் மேத்தா, அம்பானி தொடங்கி
நம்ம ஊரு ஆட்டோ சங்கர் வரை பாடம் நடத்துவதுதான் முறையானது.
நமக்கு வேறொரு சந்தேகம்:
சில மாதங்களுக்கு முன் சென்னையில் பஸ் டிக்கெட்டை சொந்தமாகவே அச்சடித்துக் கொண்டு பயணிகளிடம் வசூல் செய்தார் ஒரு மோசடி கண்டக்டர்.
அவர் இப்போது புழல் சிறையில்…
கொடுத்த டிக்கெட்டையே திரும்பவும் வாங்கி அடுத்தப் பயணிக்குக் கொடுத்து காசு பார்த்து மாட்டிக் கொண்ட பெங்களூரு கண்டக்டரோ சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்தில்…
ஏன் இந்தப் பாரபட்சம்?